×

காதலன் சிறையில் அடைப்பு: கல்லூரி மாணவி தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் நிவேதா (18). தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 15ம் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற நிவேதா பின்னர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சீனிவாசன் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராமியம் பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவர் காதலித்து வந்த நிலையில், நிவேதாவை கடத்திச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிவேதாவை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். காதலனை கைது செய்து சிறையில் அடைத்ததால் நிவேதா மனவேதனையில் இருந்து வந்தார்.

இதனிடையே நிவேதா புதிதாக செல்போன் வைத்திருந்த நிலையில், அது எப்படி வந்தது என பெற்றோர் கேட்டு கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கச்சென்ற நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது நிவேதாவை காணவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் நிவேதா தூக்கில் சடலமாக தொங்கினார். இதுபற்றிய தகவலின் பேரில் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிவேதாவின் உடலை மட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post காதலன் சிறையில் அடைப்பு: கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Srinivasan ,Mallikutta ,Karimangalam ,Dharmapuri district ,Nivetha ,Dharmapuri… ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்